Home பாலியல் பெண் தனியே நிர்வாணமாகப் படுத்து உடல் எழிலை ரசிப்பது சரியா?

பெண் தனியே நிர்வாணமாகப் படுத்து உடல் எழிலை ரசிப்பது சரியா?

60

நான் கல்லுாரி மாணவி. சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறேன். என்னுடன் இன்னொரு தோழியும் தங்கியிருக்கிறாள். அவள் ரூமில் இல்லாத நேரங்களில் நான் உடையைக் களைந்து விட்டு அக்கடாவென்று படுத்திருப்பதுதான் பிடித்திருக்கிறது. பாத்ரூமில் குளிக்கும்போது, என் உடலை ரசித்துக்கொள்ளவும், சில இடங்களைத் தடவி விடுவதும் மிகவும் பிடித்திருக்கிறது. இது மனநோயா? அல்லது ஒரு சாதாரணமான விஷயமா? விளக்கம் வேண்டும்.

விளக்கம்தானே… அதற்கு முன்னால் ஒன்றைச் சொல்லுங்கள். வாஷ்பேஷின் கண்ணாடி, துணிக்கடை கண்ணாடி, அவ்வளவு ஏன் நின்று கொண்டிருக்கும் வண்டியின் ரியர்வ்யூ கண்ணாடி என்று எங்கு தங்கள் முகங்களைப் பார்த்தாலும், சட்டென தயங்கி நின்று, யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டு, உடனே நம் முகத்தைச் சரிபார்த்து, முடிந்தால் ரசிக்கிறோம், இல்லாவிட்டால் திருத்த முயல்கிறோம். இப்படி நம் அனைவருக்குமே கொஞ்சம் சுயரசனை உண்டுதான்.

அதே சுயரசனை தான் உங்களை, உடை களைந்து ரசிக்கவும் ஸ்பரிசிக்கவும் வைக்கிறது. இந்த அளவோடு நின்றுவிட்டால் இது ரொம்பவே சாதாரண, சுயமதிப்பை மேம்படுத்தித் தன்னம்பிக்கையை வளப்படுத்துகிற ஒரு பாசிடிவ் விஷயம்.

ஆனால், மற்ற வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு, சுயரசனையிலேயே முழுக் கவனமும் செலுத்தி வந்தால், அதுவும் ஒரு வித அடிமைத்தனம்.

யாராவது அடிமைத்தனத்தை விரும்புவார்களா? கீப் யுவர்செல்ஃப் பிஸி. மூளைக்கு உருப்படியான வேலை இருந்தால், இது மாதிரியான வெட்டிவேலைகளுக்கு அவகாசமே இருக்காதே!

—————————

பசங்களுக்கு ஏன் ஆண்டிகளை ரொம்பப் பிடிக்கிறது?.

பொதுவாகவே திருமணம் செய்யும்போது ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைவாக இருக்க வேண்டும். இது குறைந்தபட்சம் 3 முதல் 6 வயது வரை குறைவாக இருக்க வேண்டும் என்பது உலக நியதி.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் தங்களை விட அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அதேபோல பெண்கள் வயதில் குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதற்கு காரணம் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்யும் போது அவர்களால் பிரச்னைகளை சரியாக கையாள தெரிவதில்லை.
இதனால் குடும்பத்தில் தேவையில்லாத பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுவே வயதில் மூத்த பெண்களை செய்யும் போது அது தவிர்க்கப்படுகிறது.

அவர்கள் பிரச்னைகளை எளிதாக கையாள்கிறார்கள். மேலும் புரிதலோடு கலந்த அக்கறை அதிகமாக இருக்கும். இது தங்களை மேம்படுத்தி கொள்ளவும், புத்துணர்ச்சி அடையும் உதவும் என ஆண்கள் நினைக்கிறார்கள்.

வீட்டை நல்லபடியாக நிர்வகித்து கொள்வார்கள் என்ற எண்ணம் உள்ளது. வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தவறு செய்திருந்தால், அதனை வயது குறைந்த பெண்களால் ஜீரணிக்கவே முடியாது.

ஆனால் வயதில் மூத்த பெண்கள் என்றால் அதனை எளிதில் ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்கும். மேலும் அவர்கள் ஈகோ என்னும் அகம்பாவத்தை கொண்டிருக்க மாட்டார்கள். இது போன்ற காரணங்கள் வயதில் மூத்த பெண்களை விரும்ப காரணமாகிறது.