Home பெண்கள் தாய்மை நலம் பெண் கருத்தரிப்பின்மை – காரணங்களும், தீர்வும்

பெண் கருத்தரிப்பின்மை – காரணங்களும், தீர்வும்

30

பெண் கருத்தரிப்பின்மை – காரணங்களும், தீர்வும்

ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்தசோகை, புரதச் சத்துக் குறைவு ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகின்றன.

ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தாலோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்து கொடுத்து சரிப்படுத்தி விடலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதை மருந்து கொடுத்து சரிப்படுத்த முடியாது. இத்தகைய குறைபாடு உடையவர்களுக்கு சோதனைக்குழாய் முறை கைகொடுக்கிறது.

ஆணின் உயிரணுக்களையும், பெண்ணின் கருமுட்டையையும் உடலுக்கு வெளியே இணைத்து கருவுறச் செய்து மீண்டும் கர்ப்பப் பையில் கொண்டு வந்து வைப்பதே சோதனைக்குழாய் முறையாகும். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இலண்டனில் உள்ள பான்ஹால் மருத்துவமனையில் 1978 ஜூலை 25ம் தேதி பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் லூயி பிரவுன்.

ஆணின் குறைபாட்டைத் தீர்க்கும் இக்ஸி முறை

குறைபாடுள்ள பெண்களின் பிரச்சினையை சோதனைக்குழாய் முறை மூலம் தீர்த்து கருத்தரிக்க வைப்பதுபோலவே, ஆண்களின் குறைபாட்டைத் தீர்க்க இக்ஸி என்ற முறை உள்ளது. விந்தணு உற்பத்தி குறைவாக இருந்தாலோ அல்லது சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ கவலையேபட வேண்டாம். இக்ஸி முறை இருக்கிறது.

சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால் இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள். இந்த முறை 100 சதவீதம் வெற்றியைத் தருகிறது.