Home பாலியல் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய செக்ஸ் கேள்விகள்

பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய செக்ஸ் கேள்விகள்

177

உடலுறவு என்பது மனித இனத்தின் இயற்கையான ஒரு செயல்பாடு. ஆணோ, பெண்ணோ தனியாக அல்லது எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது அல்லது பிற எந்த நேரத்திலும் அவர்களுக்கு பாலியல் கிளர்ச்சி உண்டாகலாம். சிலசமயம், பாலியல் கிளர்ச்சி தொடங்கும் நேரம் சரியில்லாததால், உடலுறவு அந்த அளவு விரும்பிய அனுபவமாக இல்லாமல் போகக்கூடும். இருப்பினும், காலை நேரம் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஏனெனில் காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது சௌகரியமானது என்பதுடன் பல்வேறு உடல்நல நன்மைகளும் உள்ளன.

காலையில் உடலுறவில் ஈடுபடுவது ஏன் நல்லது, அதனால் எப்படி நன்மைகள் கிடைக்கின்றன எனப் பார்ப்போம்

1) சௌகரியமானது, அத்துடன் உங்களை ஆசுவாசமாக வைத்துக்கொள்கிறது (It is convenient and keeps you relaxed):

நீண்ட நேரம் வேலை செய்வது, பயணம் செய்வது, வீட்டு வேலைகள் போன்ற பல காரணங்களால் நாம் அதிகம் களைப்படைந்து மன அழுத்தத்துடன் இருப்போம். இதற்கெல்லாம் பிறகு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கினால் போதும் என்றுதான் தோன்றும். ஆனால் இரவெல்லாம் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலை வேளையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் தெம்பாகவும் இருப்பீர்கள். உங்கள் ஆசைகளை ஆற்றலுடன் வெளிப்படுத்த ஏற்ற சூழ்நிலையாகவும் காலை வேளை இருக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலையே உண்மையில் மனநிலையை ஊக்குவித்து மேம்படுத்துகிறது, இதன் காரணமாக நாள் முழுதும் நீங்கள் ஆசுவாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

2) உங்கள் துணைவருடன் நெருக்கத்தை மேம்படுத்துகிறது (It enhances the bonding with your partner):

உங்கள் துணைவருடன் எப்போதும் நெருக்கத்தில் இருப்பது என்பதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காலை நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதே புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டும். உடலுறவின்போது வெளியிடப்படும் ஆக்சிடோசின் ஹார்மோன் உங்களுக்கு நல்ல உணர்வையும் நேசிக்கப்படும் உணர்வையும் அளிக்கிறது, உடலுறவுக்குப் பிறகு சுரக்கும் என்டோர்பின் ஹார்மோன் உங்களை நாள் முழுதும் புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். புத்துணர்வான உடலுடனும் ஆசுவாசமாக காலையில் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் உடலுறவு மறக்க முடியாத இன்ப நினைவுகளை வழங்கிச்செல்லும். இந்த இன்ப நினைவுகளும், காலையில் கிடைக்கும் சிறந்த உணர்வும் உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும்.

3) விறைப்புக் கோளாறு (ED) உள்ள ஆண்களுக்கு இது நல்ல பலன் தரும் (It is beneficial for men with erectile dysfunction):

விறைப்பு குறைவாக இருந்தால், விறைப்பே ஏற்படாமல் இருந்தால் அல்லது உடலுறவின் போது விறைப்புத் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால் உங்களுக்கு விறைப்புக் கோளாறு இருக்கலாம். டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதும் விறைப்புக் கோளாறுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காலை நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது இதற்கு ஓர் இயற்கைத் தீர்வாக அமையலாம். எனவே, விறைப்புக் கோளாறுள்ள ஆண்கள் காலை நேரத்தில் உடலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. காலையில் உடலுறவில் ஈடுபடுவது விறைப்புக் கோளாறு உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் நன்மை.

4) நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது (It improves the immune system):

கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோன் (நோய் எதிர்ப்புத் திறனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஹார்மோன்) காலை வேளைகளில் அதிகபட்சமாக இருக்கும், மாலை நேரத்தில் குறையும். தினசரி நாம் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தால் கார்டிசோல் அளவு நாள் முழுதும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இப்படியே தொடரும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மாறாக, காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது நாள் முழுதும் தெம்புடன் இருக்க உதவுகிறது, கார்டிசோல் அளவை சரியானபடி பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும்.

5) உடல்நலம் சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது (It reduces health risks and keeps you fit):

உடலுறவில் ஈடுபட, நீங்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது உடலுழைப்பு இருக்க வேண்டும். உடலுறவு என்பதே ஒருவித ஏரோபிக் பயிற்சி தான்.

காலை உடலுறவு என்பது இருவரும் புத்துணர்ச்சியுடனும் ஆசுவாசமாகவும் இருக்கும்போது நடக்கிறது. நாள் முழுதும் தொடரும் அதன் இனிய நினைவுகளும், நல்ல அனுபவத்தைக் கொடுப்பதால் இதே பழக்கமாக வாய்ப்புள்ளது. காலையில் உடலுறவு கொள்வதைப் பழக்கமாக வைத்திருந்தாள், உடல்நலம் மேம்படும் என்றும், நோயுறும் வாய்ப்பு குறையும் என்று பாலியல் நிபுணர் திரு. யுவோன் கே. ஃபுல்ப்ரைட், PhD கருதுகிறார்.

வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையேனும் உடலுறவில் ஈடுபடுவது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதாகத் தெரிகிறது என்று பெல்ஃபாஸ்ட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தை பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மார்பக இரத்தநாள வீக்கம் என்றால் என்ன? (What is Postpartum or post-delivery breast engorgement?)

பிரசவித்த தாய்மார்கள் பலருக்கு, அவர்களின் மார்பகத் திசுக்களில் பால் அளவுக்கு அதிகமாக நிரம்பும்போது மார்பக இரத்தநாள வீக்கம் என்பது ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் அதிக வலியாக இருக்கும், இயல்பாக இது தற்காலிகமானது.
breastengorge
காரணங்கள் (Causes)
பால் உற்பத்தியில் உள்ள சமநிலையின்மையே இதற்கு முக்கியக் காரணம். அதாவது இவர்களுக்கு குழந்தைக்குத் தேவையானதை விட அதிக அளவில் பால் சுரக்கும். வழக்கமாக, பால் உற்பத்தி ஆவதற்கு முன்பு, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த சீம்பால் சுரக்கும்.பால் உற்பத்தி தொடங்கும்போது, மார்பகங்கள் வீங்கும், கூச்சம் ஏற்படும், பெரிதாகும். வழக்கமாக, ஓரிரு நாட்கள் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டினாலே மார்பக இரத்தநாள வீக்கம் சரியாகிவிடும்.

அறிகுறிகள் (Symptoms)
பொதுவாக, பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக இரத்தநாள வீக்கம் இருந்தால் பின்வரும் பிரச்சனைகளாக அது வெளிப்படும்:
மார்பகங்கள் நிரம்பியுள்ளது போன்ற உணர்வு
மார்பகங்களில் வலி, வீக்கம்
கக்கத்தில் வலி, வீக்கம்
முலைக்காம்புத் தோல் தடித்தல்
மார்பகங்களைத் தொட்டுப்பார்த்தால் கட்டி போன்று இருப்பது
நோய் கண்டறிதல் (Diagnosis)
இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்து உறுதிப்படுத்த சிறப்பு சோதனைகள் எதுவும் தேவையில்லை. அறிகுறிகளை வைத்தே இதனை உறுதிப்படுத்தலாம்.

சிகிச்சை (Treatment)
பொதுவாக, பால் உற்பத்தி தொடங்கிய சில நாட்களிலேயே குழந்தையின் தேவையைப் பொறுத்து அது தானாகவே உற்பத்தி சமநிலைக்கு வரும். இந்த அறிகுறிகளிளிருந்து நிவாரணம் பெற கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் உதவும்:
பாலூட்டும் முன்பு, இரண்டு மார்பகங்களுக்கும் வெப்ப ஒற்றடம் கொடுக்கலாம், அழுத்தி விடலாம் அல்லது மசாஜ் செய்யலாம்.
குழந்தைக்கு பால் தேவைப்படவில்லை என்றால், பாலைப் பீய்ச்சி வெளியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு (72 மணிநேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும்) பயன்படுத்தலாம்.
வலியைக் குறைக்க, குளிர் ஒற்றடம் கொடுக்கலாம்.
தாய்ப்பாலூட்டாத சமயங்களில், மார்பகங்களை வெப்பப்படுத்துவதோ அழுத்தித் தூண்டுவதோ கூடாது, மார்பகங்களை நன்கு தாங்கிப் பிடிக்கும் வகையிலான பிரா பயன்படுத்தவும்.
வலி தாங்க முடியாத அளவுக்கு இருந்தால், மருத்துவர் அதற்கு வலி நிவாரண மருந்துகளையும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.

தடுத்தல் (Prevention)
பாலூட்டும் செயலை கவனமாகக் கண்காணித்து சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இரத்தநாள வீக்கத்தைத் தடுக்கலாம். குழந்தைக்கு பால் தேவையா என்பதை குழந்தையின் சமிக்ஞைகளைக் கொண்டு சரியாகப் புரிந்துகொண்ட, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் குழந்தைக்குப் பாலூட்டவும். ஒவ்வொரு முறை பாலூட்டும்போதும் மார்பகங்களில் பால் இல்லாதபடி காலியாக்கவும். இதன் மூலம் பால் சுரப்பு சீராக இருக்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
சிக்கல்கள் (Complications)
முலைக்காம்புத் தோல் தடிப்பதாலும், மார்பகங்கள் அதிக பாலால் நிரம்பிவிடுவதாலும் குழந்தை சரியாகப் பாலருந்த முடியாமல் போகலாம், இதனால் சீக்கிரமே குழந்தை தாய்ப்பாலை விடுத்து புட்டிப் பாலுக்கு மாறக்கூடும்.

பால் குறைவாக வருதல்: தொடர்ந்து சரியாக பாலூட்டாமல் போனால், பால் முழுதும் காலியாகாது, இதனால் பால் உற்பத்தி குறையும்.
மார்பகப் பிரச்சனைகள்: இந்தப் பிரச்சனையால் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படலாம், முலைக்காம்பில் வலி ஏற்படலாம், மார்பக அழற்சி ஏற்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
மார்பக இரத்தநாள வீக்கம் என்பது தற்காலிகமான பிரச்சனைதான். இதனைச் சமாளிக்க மேலே கூறிய வழிமுறைகளை நீங்களே வீட்டில் பின்பற்றிப் பார்க்கலாம். இவற்றைச் செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மருத்துவரைச் சந்திக்கவும்