Home ஜல்சா பாம்பை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்!

பாம்பை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்!

18

ஆந்திராவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் இளம்பெண்ணை பாம்பை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தொழில் அதிபர் ஒருவரின் மகன் தனது 18 வயது வருங்கால மனைவியுடன் பண்ணை வீட்டுக்கு கடந்த மாதம் 31ம் தேதி சென்றுள்ளார்.

அப்போது 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் காவலாளியை அடித்துவிட்டு பண்ணை வீட்டுக்குள் புகுந்தது. வீட்டுக்குள் இருந்த அந்த வாலிபரை அடித்துவிட்டு பாம்பை காட்டி அந்த பெண்ணை 4 கொள்ளையர்கள் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தனர். இது குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டினர். அதன் பிறகு அந்த கும்பல் ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றது.

பின்னர் அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 7 பேரையும் அவர்கள் தலைமறைவாக இருக்க உதவிய 2 பேரையும் கைது செய்தனர். அந்த கும்பல் இதே போன்று பாம்பை காட்டி பஹதிஷரீப் பகுதியில் பல்வேறு குற்றங்களை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதில் முக்கிய குற்றவாளியான பைசல் தய்யானிக்கு சில அரசியல் தலைவர்களின் ஆதரவு உள்ளது. அவர் தங்கள் மீது பலாத்கார வழக்கை பதிவு செய்ய வேண்டாம் என்று கூறி இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். லஞ்சம் வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.