Home இரகசியகேள்வி-பதில் நண்பன் மனைவி மீது மோகம் ஏற்படுவது தவறா?

நண்பன் மனைவி மீது மோகம் ஏற்படுவது தவறா?

245

கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது?

பதில் – இது இயற்கையானது. கனவில் விந்து வெளியாவது குக்கரில் உள்ள சேஃப்டி வால்வ் போன்றது. உங்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடு கிடைக்கும்போது, அதாவது சுயஇன்பம் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இது குறைந்து விடும்.

கேள்வி – சுயஇன்பம் அனுபவிப்பது ரத்த சோகையை ஏற்படுத்துமா?

பதில் – இல்லை. இழப்பு சீக்கிரமே ஈடு செய்யப்பட்டுவிடும்.

கேள்வி – எனது காதலன் என்னை முத்தமிட்டான். நான் கர்ப்பமாகி விடுவேனா?

பதில் – இல்லை. கர்ப்பமடைய, ஆணின் விந்து பெண்ணின் குறிக்குள்ளாக செல்லவேண்டும்.

கேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

கேள்வி – எனக்கு 28 வயதாகிறது. எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. முதல் முயற்சியில் பிரச்சனையில்லை. ஆனால் இரண்டாம் முறை ஈடுபட முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. முதல் முயற்சியில் நான் நிறுத்தி தொடரும் முறையை மேற்கொண்டால், விந்து வெளிப்படுவதற்கு முன்பே விறைப்புத் தன்மை இழக்கப்படுகிறது. தயவுசெய்து உதவவும்.

பதில் – எப்போது போதும் என்று உங்கள் உடல் சொல்லும். இரண்டாவது முறையை தவிர்க்க வேண்டும் அல்லது சில மணிநேரத்திற்கு தள்ளிப் போட வேண்டும். முதல் உறவுக்கு முன்பாக ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்தும் வகையில் சிறப்பாக முன் விளையாட்டில் ஈடுபடவும்.

கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய் (ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான் முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?

பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக் கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண் மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள் கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே சிறந்தது என்பேன்.

கேள்வி – எனக்கு வயது 26. கடந்த எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு குறைவான பாலுணர்வு ஏற்படுகிறது, சோம்பேறித்தனமான விறைப்புத்தன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகின்றன. என்னுடைய எச்பிஏ1சி 6.2, 6.5, 6.7 ஆக இருந்து வந்தது, கடைசியாக 7.3% இருந்தது. நான் ஹூயூமன் மிக்ஸ்டேர்ட் 30/70 இருமுறை (40 யூனிட்கள் காலையில், 30 யூனிட்கள் மாலையில்), பினோம்-10 (ஆல்மெச்ரடான் மெடோக்ஸோமில்), ஆப்டிசுலின் மல்டிவிட்டமின் கேப்சூல் எடுத்துவருகிறேன்.
தற்போது போட்டி தேர்வுகளுக்காக மும்முரமாக தயாராகி வருகிறேன். தேர்வு அழுத்தம், இதர இயற்கை உடல் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விறைப்பின்மை போன்ற வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.

பதில் – ஆம், நீரிழிவு ஆண் விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. மேலும் (உங்களைப் பொறுத்தவரை) பல ஆண்டுகள் இருந்து சிறப்பாக கட்டுப்படுத்தாவிட்டால் இவ்வாறு ஆகும். உங்கள் மருத்துவரை சந்தித்து சிறந்த கட்டுப்பாட்டை பெற அவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்த விரும்புகிறோம்.
மேலும் உங்கள் பிரச்சனைக்கான துல்லியமான காரணங்களை அறிந்துகொள்ள நீங்கள் வேறு பல சோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ, ஏமாற்றமடையவோ தேவையில்லை. உங்கள் பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதை கடைப்பிடித்தாலே நீங்கள் உங்கள் திருமணத்திற்கு முன்பாகவே சரியாகி விடலாம்.

கேள்வி – எனக்கு 47 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் பிரச்சனை. ஆனால் எனக்கு அது விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் – உங்கள் சந்தேகங்களை உறுதிசெய்துகொள்ள பெண் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குறியை இறுக்கமாக்கும் அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படலாம். அதேவேளையில், உங்கள் குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் என்பதால் நீங்கள் இணையங்களில் பார்த்து கெஜல் உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்.

கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன். நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா?

பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும்.

கேள்வி – எனக்கு வயது 25. நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும்போதெல்லாம் கடினமாக உணருகிறேன். விந்தோடு மஞ்சள் நிற திரவம் வெளிப்படுகிறது. ஏன் இப்படி ஆகிறது?

பதில் – மாதிரியை (பேதாலாஜிஸ்ட்) நோய் குணங்களை ஆராயும் நிபுணரிடம் எடுத்துச் செல்லுங்கள். அது என்னவென்று அவர் சொல்லுவார். அது விந்து திரவமாக இருப்பதால் அது என்னவாக இருந்தாலும் உங்களை பாதிக்காது.

கேள்வி – எனக்கு வயது 28. எனக்கு திருமணமாகப் போகிறது. நான் கடந்த 14 வருடங்களாக எப்போதாவது சுயஇன்பம் அனுபவித்து வருகிறேன். அண்மைக் காலமாக விந்து மிகவும் மென்மையாக தண்ணீர்போல உள்ளது. நான் கைகளை பயன்படுத்தி சுயஇன்பம் காணும்போது அது திடமாகிறது. என் விந்துவின் தரம் நன்றாக உள்ளது என்றாலும் நான் கைகளால் தொடும்போது ஒட்டுவதில்லை. என்னால் தந்தையாக முடியுமா என்று கவலைப்படுகிறேன். தயவுசெய்து விளக்கவும்.

பதில் – உங்கள் வயதில் தானாக விறைப்பது கடினமே. உங்கள் விந்துவை கவனிப்பதை நிறுத்திவிடுங்கள். அது தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்.

கேள்வி – நான் புதிதாக மணமானவள், எனக்கு வயது 24. நானும் என் கணவரும் பிரச்சனையில்லாத உடலுறவு சுகம் பெற்று வருகிறோம். ஆனால் உடலுறவின்போது அந்த சுகத்தை, பரவசத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை. என் கணவரின் குறி விறைப்புக்குப் பின் 4.5444.5 – 5 அங்குலம் நீளம் உள்ளது. உடலுறவை அனுபவிக்க, உச்சநிலையை அனுபவிக்க என்ன செய்யலாம்? அதேபோல அவரது குறியின் நீளம் எனக்கு சுகத்தை தர போதுமானதா?

பதில் – உங்கள் கணவர் உடலுறவை ஆரம்பிக்கும் முன்பாக ஒரு உச்சநிலையைப் பெற அவரை முன்விளையாட்டில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளவும். அவருக்கு விந்து வெளிப்படும்போது, அவரது உடலில் விளையாடுவது அல்லது அவரின் விரல்களை பயன்படுத்தி இரண்டாவது உச்சநிலையை பெறவும்.

கேள்வி : என் வயது 29; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். நான் வேலை பார்க்குமிடத்திலிருந்து, வெகுதொலைவில், என் சொந்த ஊர் உள்ளதால், வார விடுமுறைக்கு மட்டுமே ஊருக்கு செல் வேன். அப்போதும்கூட, நான், என் வீட்டிலேயே தங்க மாட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே பழக்கமான நண்பனின் வீட்டிற்கு சென்று விடுவேன்.

என் நண்பனின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு மு ன், மணமானது. அவர் எனக் கும் சொந்தந்தான்; அவருடைய மனைவி, நடிகையை போன்று, மிக அழகாக இருப்பார். இப்போது அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

என் நண்பன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகமானார். நானும், என் நண்பனும் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த பெண் இடையில் வந்து பேசுவாள். இந்தப் பழக்கம், சாதாரணமானதாக தொடங்கி, மணிக்கணக்கில், ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி, நகைச்சுவையுடன் பேசுவது என, இரண்டு வருடம் தொடர்ந்தது.

பேசும்போதே இரட்டை அர்த்தத்தில் விடுகதை, ஜோக் சொல்வாள். இதை, ஆரம்பத்தில் நாங்கள் தவறாக நினைக்கவில்லை. ‘ஜாலியான டைப், கள்ளம் கபடமில்லாமல் பேசுறாங்க’ என்று, நினைத்தோம். அதனால், நாங்களும், செக்ஸ் பற்றிய சந்தேகங்களை கேட்போம்; அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொல்வாள். இதனால், அந்த பெண்ணிற்கு, ‘மாத்ருபூதம்’ என்று, பெயர் வைத்தோம்.

அவ்வாறு பேசும் போதெல்லாம், அந்த பெண் என்னை உற்றுப் பார்ப்பதுடன், திடீரென்று யாருக்கும் தெரியாமல் கண்ணடிப்பாள். அப்போது, எனக்கு, ‘ஷாக்’அடிப்பதுபோல் இருக்கும்.

இதனால், என் வேலையில் கவனம் இல்லாமல் போனதுடன், சின்ன சின்ன விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. முதன் முதலில், இந்த பெண்ணை பார்த்தவுடன், இவளைப் போன்றே எனக்கும் மனைவி அமைய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை, பேராசையாக மாறி, அவள் மீது, காதலாக மலர்ந்தது. இதை, நான், அவளிடம், சொன்னதற்கு, ‘எனக்கு கல்யாணமாகி, இரண்டு குழந்தையும் ஆயிடுச்சு. இல்லாட்டி, உங்களோட ஓடி வந்துடு வேன்…’ என்று, சொன்னாள்.நான், அவளை விரும்புவது, தவறுன்னு அறிவுக்கு தெரியுது. ஆனா, மனசுக்கு தெரியலை.

எப்போதும், அவள் நினைவாகவே இருந்தது. இதனால், நாங்கள் தவறு செய்ய துணிந்து, நெருங்கியும் விட்டோம். ஆனால், தவறு செய்யவில்லை.
இந்நேரத்தில் தான், எனக்கு திருமணம் நடந்தது. இப்போது, அவளை மறக்க முடியாததால், என் மனைவியுடன் முழு மனதுடன் வாழமுடியவில்லை. ஆனால், என்மனைவி, மிகவும் அன்பானவள். என் வாழ்க்கையும், அவள் வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்க, நீங்கள் தான் ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —

பதில் : ‘திருமணமான பெண்ணை விரும்புவது தவறுன்னு அறிவுக்கு தெரிகிறது; மனசுக்கு தெரியலையே… அதனால், நாங்க இருவரும் தவறு செய்ய துணிந்து, நெருங்கி விட் டோம். ஆனால், எந்த தவறும் செய்யவில்லை. இந்த சூலில், நான் என்ன செய்ய வேண்டும்…’ என்று கேட்டு, தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. உன் பிரச்னையை நானும் நன்கு உணர்கிறேன்.

மகனே… மிருக குணத்துடன் தவறு செய்ய துணிந்தும், அவ்வாறு தவறு செய்யாமல், நல்ல மனிதனாக இருந்த, உன் பண்பை பாராட்டுகிறேன். இன்னும், உள் மனதில், நீ நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாய். பிரச்னையின் வீச்சு, அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்தும் வைத்திருக்கிறாய்.

ஒன்றை தெரிந்து கொள்… எவர் ஒருவர், பிரச்னையை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறாரோ, அவர், தம் பிரச்னையில் இருந்து விடுபட, அதிக நாட்கள் ஆகாது. பலரு க்கு இருக்கும் பிரச்னையே, அவர்களது பிரச்னை புரியாமல், அதனுள்ளேயே உழன்று கொண்டிருப்பது தான்.

உனக்கு திருமணமாவதற்குமுன், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற பெண்ணிடம், செக்ஸ் சம்பந்தப்பட்ட பேச்சுகளை நேரம்போனதே தெரியாமல்,இரட்டை அர்த்தத்துடன் பேசி மகிழ்ந்திருக்கி றீர்கள்.

ஆனால், நீ, உள் மனதில், அப்பெண்ணை அடைந்தே தீர வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன், காய்களை நகர்த்தியிருக்கிறாய்.
இந்நிலையில், உனக்கு திருமணமானபின், அந்த பெண்ணை மறக்க முடியாததால், உன் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க முடியவில்லை. இதனால், பல சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கிறாய். இவை எல்லாம் போதா தென்று, அப்பெண் கண்ணடிக்கிறாள், பார்க்கிறாள் என்று, பித்து பிடித்தவன் போல, புலம்பிக் கொண்டிருக்கிறாய்.

நன்றாக யோசித்துப் பார். ரோட்டில் ஒரு பெண் எதிரே வரும்போது, அவளை பார்க்கிறோம். அவள் நம்மை கடந்த பிறகும், மீண்டும் பார்க்க வேண்டும் என, மனதில் ஒரு கட்டளை வந்தவுடன், அருகில் இருப்பவரிடம், ‘இவளை எங்கோ இதற்கு முன் பார்த்திருக்கிறேனே…’ என்று, சில நிமிடங்கள், அவளைப் பற்றி பேசி மகிழ்வது கிடையாதா!

அதைப் போன்று, உன் உறவும் ஏன் முழுக்க முழுக்க, கற்ப னையாக இருக்கக் கூடாது? உன் கடிதத்தை படித்தவுடன், எனக்குள் எழுந்த கேள்விகள்…
திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், மணமாகாத இரண்டு விடலைப் பையன்களுடன், ‘செக்ஸ்’ பற்றி அதிகம் பேச காரணம் என்ன?
தன் கணவர் வீட்டில் இருக்கும்போது கூட, உன் போன்ற நபர்களுடன், இம்மாதிரி ஜோக் அடித்து பேசுவாரா?

அப்பெண்ணின் கணவருக்கு, இவர் இப்படிப் பேசுவது தெரியுமா?
இப்போது தவறு செய்யவில்லை… இனியும் தவறு செய் யாமல், நீங்கள் இருவரும் இருப்பீர்களா அல்லது வாய்ப்பு கிடைத்தால், அதை பயன்படுத்துவீர்களா?

உன் மனைவிக்கு உன் லீலைகளைப் பற்றி தெரிய வந்தால், அவள் என்ன நினைப்பாள்? இப்போது உடனடியாக நீ செய்ய வேண்டியது என்னனென்ன என்று பார்ப்போம்…
அடுத்தவரின் மனைவியுடன் பேசும்போது, உன் எல்லையை, தெரிந்து வைத்திருப்பது.

சமுதாயத்தில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவு முறையா? என நினைத்து, அப்பெண்ணிடமிருந்து விலகி செல்.
நடைமுறைக்கு ஒத்துவரக் கூடிய நிகழ்வுகளைப் பற்றி நினைத்து, செயல்படுத்து. கற்பனை உலகில் இருப்பதை தவிர். மீண்டும் மீண்டும் இப்பிரச்னையே மனதில் வந்து, உன் வாழ்வில் தொந்தரவுகள் ஏற்பட்டு, மனநிம்மதியை இழக்க இருக்கும் பட்சத்தில், நல்ல மனநல மருத்துவரை அணுகு.

சுவையான கனியாக உன் மனைவி இருக்கும்போது, தேவையில்லாத பிரச்னை தரக்கூடிய அடுத்தவரின் மனைவியான காயை, நீ தேர்வு செய்ய மாட்டாய் என, நம்பிக்கையுடன் உன் வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.