Home ஜல்சா நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதே இவங்க வேளையா இருக்கு – ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்!!!

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதே இவங்க வேளையா இருக்கு – ராதிகா ஆப்தே பரபரப்பு புகார்!!!

20

தன்னை சினிமா தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார் என நடிகை ராதிகா ஆப்தே குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகைகள் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தென்னிந்திய திரை உலகிலும் இந்த கலாச்சாரம் உள்ளதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, தமிழில் டோனி, வெற்றிச் செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ராதிகா ஆப்தே கூறுகையில், பொதுவாக திரைத்துறையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் உள்ளது. தென்னிந்திய திரைத்துறையிலும் அது உள்ளது.

ஒரு முறை ஒரு தயாரிப்பாளரை சந்தித்தேன். அவருடன் படம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென என்னை படுக்கைக்கு அழைத்தார்.

அதிர்ச்சியடைந்த நான், அவரை உதாசினப்படுத்தி விட்டு சென்றுவிட்டேன். இதனால் எனக்கு தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரவில்லை என நினைக்கிறேன் என்றார்.