Home சூடான செய்திகள் தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா?

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடுமா?

18

images (7)தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்க ளிடையே உள்ளது. ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கி ன்றனர் மருத்துவர்கள்.
அதேசமயம், செக்ஸ் உற வை ஆரம்பித்த பின்னர் பெ ண்களுக்கு மார்புகள், இடுப் புகள் பெருப்பது உண்மை தான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுர ப்பு அதிகரிப்பதனால் தான் உடல் பெருக்கிறது என்கின்றனர் மருத் துவர்கள்.
பூரிப்பும் திருப்தியும்
அதேபோல திருமணத்திற்கு பின்னர் ஆண்களும், பெண்களு ம் குண்டாகி விடுகிறார்கள். இப் படிக் குண்டாவதற்கும், செக் ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல் லை. சிங்கிளாக இருப்பவர்க ளை விட திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உற வில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு கார ணமாக அமைகிறது
கட்டுப்பாடும் பயிற்சியும்
தாம்பத்ய உறவு காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. உற வின் போது ஏற்படும் திருப்தி, அத னால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, திருமணம்தான் ஆகிவிட்டதே என்ற ரிலாக்ஸ் மன ப்பான்மை, அதுவரை கடைப்பிடி த்து வந்த உணவு, உடற் பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தள ரும் போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகும், தாம்பத்ய உறவைத் தொடங்கிய பிற கும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாரா வது விரும்பினா ல், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப் பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.