Home சமையல் குறிப்புகள் சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

சுவையான வடைகறி ரெசிபி செய்வது எப்படி

26

Captureதேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய – 2
உப்பு – தேவையான அளவு

கிரேவி செய்ய :

வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது

தாளிக்க :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

* பிறகு அதில் வடைகளை 4 துண்டுகளாக பிய்த்து போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வடைகறி ரெடி!!!

* வடையை உதிர்த்து போட்டும் வடைகறி செய்யலாம். விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.