Home சமையல் குறிப்புகள் சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

சிம்பிளான தக்காளி சாதம் செய்முறை விளக்கம்

29

Captureதேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 1 கப்
தக்காளி – 5
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
பூண்டு – 6 பற்கள்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1

செய்முறை :

* தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

* தக்காளியானது ஓரளவு வதங்கியதும், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* தக்காளி கலவையானது தொக்கு போன்று சுருங்கும். அப்போது அதனை இறக்கி, அதில் சாதத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* சுவையான தக்காளி சாதம் ரெடி!!!