Home சமையல் குறிப்புகள் கோழிக்கறி காளான் மசாலா

கோழிக்கறி காளான் மசாலா

28

சைவப் பிரியர்கள் காளானை அசைவ ருசியில் சமைத்துச் சாப்பிடுவார்கள். அது கிட்டத்தட்ட கோழிக்கறியின் ருசியைத் தரும். நிஜமாகவே காளானை கோழிக்கறியுடன் சேர்த்து மசாலா செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். செய்து சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்
கோழிக்கறி – 1/2 கிலோ
குடமிளகாய் – 150 கிராம்
காளான் – 100 கிராம் (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம் – 150 கிராம்
பச்சைமிளகாய் – 4
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
* கோழிக்கறியைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்துக் கீறிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
* பின் நறுக்கிய குடமிளகாய், காளான், சிக்கன் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* தட்டிய மிளகாய் இஞ்சி, பூண்டு இவை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும்.
* லேசாக நீர் தெளித்து, குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும்.

* அனைத்துப் பொருட்களும் மசாலாவுடன் ஒன்று சேர்ந்து வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்