Home ஜல்சா ‘கேங்ஸ்டர்’ வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஆபாசப் படத்தில் நடித்திருப்பேன்

‘கேங்ஸ்டர்’ வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஆபாசப் படத்தில் நடித்திருப்பேன்

25

மும்பை: ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் நான் ஆபாசப் படத்தில் நடித்திருப்பேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா. தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

‘கேங்ஸ்டர்’ என்ற ஹிந்தி படம் மூலம் அறிமுகமாகி பிரபல நடிகையானார். அந்த படத்துக்காக மட்டும் அவர் 5 விருதுகள் பெற்றார். இது தவிர் ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகை என்ற தேசிய விருதைப் பெற்றார். 29 வயதில் 3 தேசிய விருதுகளை பெற்ற ஒரே ஹிந்தி நடிகை இவர் மட்டுமே. இதுகுறித்து கங்கனா கூறியதாவது:

ஹிந்தியில் ‘கேங்ஸ்டர்’ படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது நல்ல படம் இல்லை என்று எனக்குப் பிறகுதான் தெரிந்தது. ஆனாலும் நடிக்கலாம் என்று இருந்தேன்.

அந்தப் படத்துக்காக போட்டோஷுட்டும் நடத்தினார்கள். அனைத்து அங்கமெல்லாம் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். அது நீலப்படம் போன்று இருந்தது. இது சரியில்லை என்று நினைத்தேன்.

அந்த நீலப் படத்தில் கிட்டத்தட்ட நடிக்கவிருந்த நேரத்தில் தான் ‘கேங்ஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீலப்படத்தில் நடிக்க மறுத்தேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் என் மீது கோபப்பட்டார். உன் மீது வழக்குப் போடுகிறேன் என்று கூட பயமுறுத்தினார். ஆனால் நான் அசரவில்லை.

‘கேங்ஸ்டர்’ வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நீலப்படத்தில் நடித்திருந்திருப்பேன். நான் என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பவள். தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன் என்று கூறினார்.