Home பாலியல் குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?

குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?

14

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அத ற்கு பெயர் இன்பெர்டிலிட்டி. அதுவே நிரந்த ரமான வையாக இருந்தால் அதற்கு ஸ்டெரி லிட்டி என்று பெயர். ஒரு வேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமான வையாக இருந்தாலும், இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்க முடியாத குறைகள் இரு ந்தால் டோனர் இன்செமினேஷன்… பெண்ணுக்கு சரோகேட் மதர் எனும் நவீன சிகிச்சை முறைகள் உதவுகின்றன.
பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வே ண்டும் என்றால், கருமுட்டை வெளி யாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமி ன்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணி க்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண் டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப் பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்து டன் இருக்க வேண்டும்.
ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்க ள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங் கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு.
குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40&லிருந்து 45 சத விகி தம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50&லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரை யும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.
ஆண் சார்ந்த காரணங்கள்:
சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயி ரணு உற்பத்தியாவதில் பிரச்னை இரு ப்பது:
ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தை யை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லி&க்கு 20 மில்லியன் உயிரணுவாவது இரு க்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வே ண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சத விகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொ டிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகி தமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இவை உலக சுகாதார நிறுவனம் 1992&ல் வெளி யிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள் ளவை.
ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற் பட்டிருந்தாலோ, தொற்றுநோய் ஏற் பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ& தரமான உயி ரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்ப டும். சத்தான உணவு, உடற் பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல் லாதிருக் கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொது வாகத் தடையேதும் இருப்பதில்லை.
உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை:
சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமை ப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன் மையான, முக்கியமான நோக்கம்& சந்ததியை உருவாக்கு வது தான். இனப்பெருக்கம் ஒன்று க்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதா ன் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், அதனுடன் ஒருவிதமான இன்ப த்தையும் இணைத்து வைத்துள் ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணை சேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.
சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனைவியின் உறுப்பில் தங்கா த சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படி யொரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன. ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப்பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறா மல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் தங்காமல் போகலாம்.
உடலுறவுகொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:
ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான்போது மான அள வில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதேநாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளு ம்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவி ல் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடை வெளி விட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல், உயிருடன் இருக் கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறை ந்துவிடும்.
செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது:
பெண்ணை உடலுறவிற்கு தயார்நிலை க்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும் போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். பெண் பிற ப்புறுப்புல் ஈரப்பதம் முன்விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இயற் கையாகவே உண்டாக்குகின்றன. இதை தவிர்த்து செயர்க்கையாக ஈரப் பதத்தை உண்டாக்க எண்னை போன்ற சில பொருட்களை பயன்படுதுவதால் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்கு ள் போகவிடாமல் தடுக்கின்றன. மேலு ம், இவை கர்ப்பப்பை, பெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற் றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி வி டும்.
ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோ ளாறு இருப்பது:
பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந் து உயிரணு வெளிப்படும் போதுதா ன் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண்குறியின் முனையில் இருக்க வே ண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண் குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளி யிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக்குறை. இதற்கு ஹை போஸ்பேடியாஸ் என்று பெயர். இன் றைய நவீன மருத்துவ விஞ்ஞான த்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக் குறையை நிவர்த்தி செய்துவிடலாம். சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக்குள் போகவே போ காது. இந்தக் குறையையும் ஆபரே ஷன்மூலம் சரிசெய்துவிட முடியும்.
பெண் சார்ந்த காரணங்கள்:
கருமுட்டை வெளியாகும் போதுதா ன் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக் கரு முட்டை வெளியாகாமல்கூட இரு க்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட& உருவான கரு, பெலோப்பியன் டியூப்பிலிரு ந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விட லாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண் களுக்குக் குழந்தை பிறக்காம ல் போகும்.
உயிரணுவானது கருப்பாதை, பெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றா ல்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச்செல்ல முடியாத அளவுக்குத்தடைகள் ஏற்பட்டு, அதனா ல் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போ கலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.