Home பெண்கள் தாய்மை நலம் குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?

42

imagesதாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக் கியத்தில் அக்கறை காட்டினா ல் குழந்தைப் பேறின்மை என் ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம். நூற்று க்கணக்கில் செலவழித்து டானி க், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நா ம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானி யங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி மு றைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல் லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்ற த்தால் எல்லாம் தலைகீழ் ஆகி விட்ட தன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மை யை நீக்க சித்த மருத்துவம் உதவு வது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-*குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
“பாரப்பா பெண்மலடாங் கற்பக் கோளின்
பக்குவத்தைச் சொல்கிறேன் பக்குவமாய்க் கேளு
ஆரப்பா ஆண் மலடே யாகுல்லாமல்
அப்பனே பெண் மலடு யாருமில்லை”
– அகத்தியர் கர்ப்பக் கோள்
என்ற பாடலின்படி கருப்பை சினைப்பை, கருக்குழ ல், கருவாய் இருந்தால் பெண் மலடு என்ற பேச்சுக் கே சித்த மருத்துவத்தில் இடமில்லை. சித்த வைத் தியம் முடிந்த முடிவான மருந்து. சித்தர்கள் சொன் ன மூலப் பொருளைக் கொண்டு சொல்லிய முறை யில் தயாரித்தால் நோய் நீக்குவது மட்டும் அன்றி நோய் வராமலும் தடுக்கலாம்.
பெண்ணை பூமாதேவி என்று அழைக்கிறார்கள். பூமியில் எந்த மண்ணி லும் விதை போட்டு தாவரங்களை வள ர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலை யும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார் ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலையும் பாலை சார்ந்த இடத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை.
“இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை
எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும்
துசங்கெட்ட கலவியினால்
துலங்காமல் பிள்ளையில்லை சொல்லிக்கேளே”
பேயாலும் என்பது மனநிலை குன்றிக் காணப்படுவ தைக் குறிப்பிடுகின் றனர். சாதாரணமாக (Psychosom -atic Disorder, Hysteria) மனநலம் பாதிக்கப்படுவதால் குழந்தைபேறடை ய முடிவதில்லை.
பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிக ளில் ஏற்படும் மாறுபாடுகளி னால் தாய்மை அடைவது தடு க்கப்படுகிற து.
வாயுவாலும் அடிவயிறு நொந் து வரும் வாயுவாலும் என்பது மாத விடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்று ம் அடிவயிற்றில் காணப்படும் உள்உறுப்புகளில் ஏற்படும் பா திப்பையும் குறிப்பிடுவதாகு ம்.
கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்ப டுகின்ற கர்ப்பப் புழுவைக் குறி க்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதா ல் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).
கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப்புகளில் தொற்றுக் கிருமிகளா ல் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதாவது (Peritonitis Salphingitis) போன்ற வையும் ஒரு காரணமாகிறது. இதனா ல் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலு ம், கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்க ள் எவை?
மேக நோய்:
மேக நோயினைத் தொடர்ந்து (Venereal Disease) கிருமிகள் தாக்குதலுக்கு கர்ப்பப் பை ஆளாவதா ல் நாள்பட்ட நிலையில் (Chronic Pelvic Inflamma -tory Disease) இது சரியாகக் குணப்படுத்தப்படாம ல் இருந்தாலும் குழந்தைப் பேறு பாக்கியம் அடைவதில் தடை ஏற்படுகிறது.
வைசூரி:
அம்மை நோய்கள் போன்று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற்படுத்துகின் ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப் பேறின்மையை உண்டாக்குகிறது.
அறியாத கலவியினால்…:
இது மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியதாகும். சில தம்பதியர் க்கு தாம்பத்திய உறவு பற்றி தெளிவா ன அறிவு காணப்படுவதில்லை. தாம் பத்திய உறவைப்பற்றி போதிய அளவு கூடத்தெரியாமல் சிலர் இருக்கின்றன ர். குறிப்பிட்ட நாள்கள் முக்கியமானது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் குழந்தைப் பேறின்மைக்கு ஒரு காரணமாகின்றது.
இவ்வகைக் காரணங்களால் ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைக்குத் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் தெளிவாகத் தொகுத்து க் கொடுத்துள்ளனர். இதனை நுட்பமாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளி த்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைத் தன்மை யை முற்றிலும் குணப்படுத்த முடி யும்.
மேலும் சித்த மருத்துவத்தில் கருக் குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometr iosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழ லை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப் போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட் டை சரிவர வளராமை போன்ற காரண ங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.
கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிக ள் என்ன?
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித் தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயி ன் கர்ப்பத்தில் இருக்கும் போது கணை ச் சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணை ச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண் ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடு க்கப்படுகிறது .
இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத் தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலை ந்து கொண் டு இருக்கிறோம்.
கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?
நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள் தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக் கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உண வுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய் வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலா சார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோ ம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உண வுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப் பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட் டை உருவாகவும், சினைப்பை, கரு ப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரி யமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டு த்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏல க்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உரு ண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூர ண வளர்ச்சி பெறும்.தேனும் தினை மாவும்சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல் ல நாள், விருந்து விழாக்கள் போன்ற வற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடு ம் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற் படுகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கு ம் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்…: எஸ்.கே .எம். சித்த மருத்துவமனையில் தேரை யர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வரு கிறோம். முதலில் உடலைச் சுத்த ம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண் ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.
பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வரா மல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைல ம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத் தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்து க்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள் ளும் முறை) செய்கிறோம். மூக்கி ற்கும், மூலாதாரத்திற்கும் தொடர் பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொ ந்தரவுகள் நீங்குகின்றன. கட் டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங் களினால் அதிக உதிரப் போக்கு, 6 மாதத்துக்கு ஒருமுறை உதிரப்போக் கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறு நீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போ ன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோத னை மற்றும் ஸ்கேன் பரிசோ தனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்க ளுக்கு நசியம் செய்து கொடுத்து மக ப்பேறு அடைந்துள்ளனர்.
மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோ ரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர்.
கலிக்கம் (கண்ணில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய் யும் மேற்கூறிய வழிமுறைக ளை பின் பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்.
இனப்பெருக்க உறுப்புகள் பலமடைய ஆசனங்கள் உதவுமா?
இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கி றோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும்.
காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டா ல் மூளைக்கு ரத்த ஓட்ட ம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவத ற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யு ம் ஒவ்வொரு செயலும் ஒரு ஆச னம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.
உடற்பயிற்சி இல்லாமலேயே உட ல் பருமன் ஏற்படுகிறது. உடல் பரு மன் உள்ள பெண்களுக்கு குழந் தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற் பட்டு வருந்துகிறார்கள்.
குழந்தைப்பேற்றுக்கு சித்த மருத் துவத்தில் உள்ள மருந்து என்னெ ன்ன?
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத் துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப் பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துக ள் கொடுக்கப்படும். வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்தி ரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர் ப்ப சஞ்சீவிஎண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகி யம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூரண ம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட் டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தை லம், மேகரா- எண்ணெய், பஞ்ச மூலி கை சூரணம், குமரி எண்ணெய், அதி மதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரண ம், கடுக்காய் சூரணம், மலைவேம் பாதி தைலம், சண்டமாருத செந்தூர ம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.