Home சமையல் குறிப்புகள் குளுகுளு பாதாம் பால் செய்முறை விளக்கம்

குளுகுளு பாதாம் பால் செய்முறை விளக்கம்

21

Captureதேவையான பொருட்கள் :

பால் – 1 லிட்டர்,
சர்க்கரை – அரை கப்,
பாதாம் – ஒரு கைப்பிடி
முந்திரி – ஒரு கைப்பிடி
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை :

* பாதியளவு பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள்.

* மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக் கொள்ளுங்கள்.

* அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள்.

* சூடான பாலில் 2 ஸ்பூன் எடுத்து அதில் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்கவும்.

* பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

* அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்றாக கலந்து, ஆறவிடுங்கள்.

* ஆறியபின், பிரிட்ஜில் வைத்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

* இந்த பாதாம் பாலை சூடாகவும் அருந்தலாம்.

* குளுகுளு பாதாம் பால் ரெடி.