Home காமசூத்ரா கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…

கலவியில் இன்பம் காலம் நீட்டிக்க…

23

கலவியை பொருத்தவரை புணர்ச்சியில் நீடிக்கும் காலமானது ஆரம்பத்தில் பெண்களுக்கு நீண்ட நேரமாகவும், ஆண்களுக்கு குறைந்த காலமாகவும் இருக்கும். பிறகு நாளாக நாளாக அதாவது தொடர்ந்து கலவியில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு விந்து வெளிப்படுதல் தாமதமாகும். பெண்களுக்கு போக காலம் குறைந்து கொண்டே வரும் என்பது அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விஷயமாகும்.

எவ்வித மருந்தும் இல்லாமல் ஆண்களால் கலவிக் காலத்தில் போகத்தை நீடிக்க எளிதான வழி உண்டு. அதாவது சேரும் நேரத்தில் மனதை முழுமையாக அந்த சுகத்தின் மீது செலுத்தாமல் வேறொன்றின் மீது செலுத்தி அறிவுடன் உணர்வையும் அடக்கி நிதானமாக பெண்ணுடன் சேர வேண்டும்.
விரல்களால் கலவியை மேற்கொள்ளும் போது பெண்களை உச்சத்தின் அருகே வரவழைத்து விட முடியும். இதனால் விரல் விளையாட்டின் மூலமே பெண்ணுக்கு காம இச்சை மிகுந்து காம நீர் பெருகத் தொடங்கும்.
பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாக பிரிக்கலாம். அதாவது தாமரை மொட்டு போல் குவிந்தது, வளர்பிறை போல் வட்டமானது, மடிப்பாகச் சேர்ந்திருப்பது, எருமை நாக்கு போல் தடித்தது என நான்கு வகையாகும். பெண் உறுப்பின் அருகே ஆண்குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்கு காம நீர் வெள்ளம் போல் பெருகும்.
ஆண்&பெண் கலவியின் போது எத்தனை வகைகளில் எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஒவ்வொரு வகையுமே புதுவகையான இன்பத்தை தரக்கூடியவை. பெண் கீழே படுத்துக்கொண்டு ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும் பெண் மேலே இருந்து செயலாற்றுவது அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும். இது தவிர ஆண்&பெண் உறுப்புகளை சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும். கலவியின் போது பல்வேறு கதைகள் பேசி உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும்.
உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்றும் எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள். இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்து போகும்.
கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு. இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி இன்பத்துடன் வாழவேண்டியது தான் மனிதனாக பிறந்ததன் பயன்.
இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச்சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான். இந்த இன்பத்துக்கு தடைபோடுவது இல்லது தவிர்ப்பது வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.