Home பாலியல் பெண்களுக்கு கன்னித்தன்மையும் கற்பும்

பெண்களுக்கு கன்னித்தன்மையும் கற்பும்

63

கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. காலப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கி றது. எந்த தப்பும் செய்யாத பெண் களைக்கூட ‘சோரம் போனவர்க ளாக’ முத்திரை குத்தி, உறவினர்களை விட்டே கல்லால் அடித்து சாகடித்த ரத்த வரலாறு பல நாடுக ளுக்குச் சொந்தம். ‘‘ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல் லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகா ப்பு கவசமான ‘கன்னித்திரை’ கிழியாமல் இருக்கும். இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி’’ இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது.

ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வ கையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம். கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிக ளில் புழக்கத்தில் இருக்கும் ‘வர் கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது. ‘யாரோடும் சேர்ந்திருக்காமல் தன் சொந்தக் காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்’ என்பது தான் இந்த வார்த் தையின் அர்த்தம். ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வ ங்கள் ‘வர்ஜின்’களாகக் கருதப்பட் டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம்.

கொடிய மிருகங்களை வேட்டையா டவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங் களிடமும் இருந்தது. அது மட்டுமில் லை… கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங் களை ஏமாற்றியோ மிரட்டியோ செக் ஸ் வைத்துக்கொண்டு, பிறகு மனை வியாக்கிக் கொண்டதாகப் புராணங் களில் இருக்கிறது. இத்தனை முரட் டு தெய்வங்களையும் சமாளித்து ஆர் டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் ‘வர்ஜின்’ என்பதன் அடையாளம். காலப்போக்கில் மத நம்பிக்கைகள் ‘வர்ஜி ன்’ என்பதைக் கன்னித் தன்மையின் அடை யாளமாக மாற்றிவிட்டன.

‘ஒரு பெண்ணு க்குக் கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார். அது ஒரு வகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாகப் பாது காக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டு மே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன்’ என மத நூல்கள் வரையறு த்தன. ‘ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான ரத்தக் கசிவு இருக்கும். இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான்’ என்ப து அந்தக்கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. ‘திருமணத் துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது. கணவனு டன் இணைந்து முதலிரவி ல்தான் அவள் முதல்முறை யாக செக்ஸை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும்’ எனக் கட்டுப் பாடு கொண்டு வந்தார்க ள். அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹை மென்’ (Hymen) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவு ளான ‘ஹைமெனியஸ்’ பெயரிலிருந்து தான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையி ல் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூ மாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனி யஸ்தான் ஓர் ஆணை யும், பெண்ணையும்

திருமண பந்தத்தில் இணைத்து வைப்ப தாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழியவேண்டிய திரை என்பதால், திருமணக் கடவுளின் பெயரிலி ருந்து ‘ஹைமென்’ என்று இதற்கு நாம கரணம் ஆனது. இப்படி கன்னித்திரை கிழிவதும், அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதும்தா ன் முதலிரவில் நிகழவேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகிவிட்டது. பழங்குடிகள், நாகரிகம் அடைந் தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்த தும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவு க்காகக் கட்டிலை அலங்கரிக் கும் போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மண மகனின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போ வார்கள். பெண்ணின் கன்னித் திரை கிழிந்து, அந்த ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்க ள். அதை ஏதோ காட்சிப் பொ ருள் மாதிரி வீட்டுப் பால்கனியி ல் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்கவிடுவார்கள். ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அதுபடும். ‘நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம்’ என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு.

எந்த வீட்டில் கல்யா ணம் நடந்தாலும், ‘கறை படிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிற தா’ என்று மறுநாள் ஊர்க் காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது. ஊர்க்காரர்கள் என்றில்லை… பெண்ணின் உறவினர்கள், மாப்பி ள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு. படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்ப தை உறுதி செய்து கொண் டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர் கள் கிளம்பிப் போவார்கள். இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக் கை விரிப்பு பெண்ணின் ச கோதரர் கையில் ஒப்படை க்கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின் னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமா ன கன்னிப் பெண்ணைத் திரு மணம் செய்து கொண்டவர் வாழ் நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம். ஒருவேளை ரத்தக்கறை இல் லை என்றால்… திருமண உற வை முறித்துக் கொள்ளும் உரி மை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை… அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பா ர்கள். இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடு கள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப் பட்டன. அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவி ல்லை என்றால், பெண்ணை அவள து அப்பாவும், சகோதரர்களும் சே ர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் செவ்விந்திய இன த்தைச் சேர்ந்த அகோமாவி பழங் குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத் து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடி க்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் வி ழுந்து விட்டால் போச் சு… ‘அவள் கல்யாணத் துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள். அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்டநேரம் ஆட முடியவில்லை’ என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள். எகிப்தில் கன்னித்திரையைக் கிழிக்கும் உரிமை கணவனு க்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணி யைச் விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். ரத்தக் கறை படிந்த அந்தப் பட்டு த்துணியை அவர் வெளியில் கொண்டுவந்து காட்டினால் தான் முதலிரவே நடக்கும். கறை இல்லாவிட்டா ல் அந்தத் திருமணம் செல்லாது என அறி விக்கப்படும். இந்தக் காலத்தில் கூட தொட ரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத் தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறா ர்கள். ஒருவேளை, துணியில் கறை படியா விட்டால் பெண்ணு டன் ரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப் பார்.

எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப் பையி ல் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவி விட்டு பிறகு அதைக் கொண்டு கீறி ரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலி உயிர் போகும்தான்… ஆனால் வாழ்க்கையே போ வதைவிட இது எவ்வளவோ பரவாயில் லை என தாங்கிக் கொள்வார்கள்!). நவீன யுகத்தில்கூட பழைய சம்பிரதாயங்க ளைக் கைவிட பலர் மறுக்கிறார்கள். இரா க் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நக ரங்களில் ஆடம்பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவையும் கொண்டாட அலங்கரிக்கப்ப ட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறைகளில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதி த்தால் படுக்கை விரிப்பு மட்டு ம் காணாமல் போயிருக்கும். கறை படிந்த அதைத் தங்கள் கிழட்டு உறவினர்களிடம் கா ண்பிக்க அந்தத் தம்பதிகள் பத் திரமாக எடுத்துப் போயிருப்பா ர்கள். ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமான வை என்பதைக் கன்னித்திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன. ஆசியக் கண்டத்தில் பழமை வாத கொள்கைகளில் இன்றை க்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமண மாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷ யம் அவளது கன்னித்திரை! ‘அ து தான் ஒரு கன்னிப் பெண்ணி ன் முகம். முகமில்லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை’ என்பார்கள். ஆனால், உடலைப் பொறுத்தவரை கன்னித்திரைக்கு எந்த வே லையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல்வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே… தற்கு உடலின் செயல் பாட்டில் எந்த பங்கும் இ ல்லை. ஏதோ அலங்கா ரப் பொருள் மாதிரி வீணா க அது உடலில் இருக்கி றது. அது இல்லாமலே கூட உடல் இயல்பாக இ ருக்கும். அது மாதிரி கன் னித்திரையும் தேவை இ ல்லாத ஓர் உறுப்புதான்! அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதி ர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில் லை. அதனால் அவர்கள் தப் பித்துக் கொள்கிறா ர்கள்!). மருத்துவரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையா க உடலுறவு கொள்ளும் போ து கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித்திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகி ழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்த தும் பழையபடி இயல்பு நிலை க்குத் திரும்பி விடுகிறது. அத னால் இவர்களுக்கு முதல் தட வை உறவின்போது இது கிழிய வும் கிழியாது… ரத்தக் கசிவும் இருக்காது… வலியும் இருக்காது! தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த போது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார் த்து நிபுணர்கள் ஆச்சரியப் பட்டார்கள். இத்தனைக்கும் ஆண்டுக்கணக்கில் தொழி லில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதி த்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது. இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருப்ப தால் சின்ன வயசிலேயே கிழி ந்து விடும். உடற்பயிற்சி செய்யு ம்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப்போட்டு உட்காரும்போ தோ, சைக்கிள் ஓட்டும் போ தோ இது சிம்பிளாகக் கிழிந்து விடும்.

இவர்களில் சிலர் கன் னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித் திரை கிழியாது … ரத்தக் க சிவும் இருக்காது. அப்படி யிருக்கும்போது… இவர்க ளை ‘கெட்டுப் போனவர்க ள்’ என முத்திரை குத்து வது எவ்வளவு பெரிய கொடுமை?! பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டு ப்போகாமல் இருக்க மேல்ப க்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்க ளே… அது மாதிரி மெல்லிய சவ்வு இது! இது ஒவ்வொரு பெண்ணு க்கும் வெவ்வேறு வடிவத்தி ல் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது ரத்தம் வெ ளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது ரத்தம் வெளி யில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர் களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல் லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். ‘கன்னித்திரையை அகற்றப் போகிறோம்’ என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரே ஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற அக்கறை தான் காரணம்! வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள். திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன்பிறகு முதலிரவின்போது ரத்தக் கசிவும் இருக்கும்… தாங்க முடியாமல் வலியும் இருக்கும். ‘செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்’ என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள். அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! தங்களது இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய! இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம்.

பணக்கார கஸ்டமர்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். ‘எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித்தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்… பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடு வதில்லை. சுய இன்பம், பிறவழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்க ளுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் தங்கள் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

‘டெக்னிக்கல் கன்னிப்பெண்கள்’ என இவர்களைச் சொல்லலாம். தன்னுடைய மகாராணி தன்னை ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்து விட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவார். காரணம்… அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ்பெற்ற செக்ஸ் புத்தகமான ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித்திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக்கூடும்.