Home ஆண்கள் கரு உருவாதலில் ஆண், பெண்குறி பங்கு !

கரு உருவாதலில் ஆண், பெண்குறி பங்கு !

38

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம்.
இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து… பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் எண்ணத்தில் ஆதி காலத்திலிருந்து இன்றுவரை எப்படி உயிர் உருவாகிறது? என்ற சுவார ஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாததினால் ஒரு பெண்ணி ன் உடம்புக்குள் நிகழ்வதை வெ ளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்ததால், கரு எப்படி உருவாகிறது என்பது தெ ரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந் தித்துக்கரு உருவாகிறது என்பது தெரியாம லே இருந்தது என்பதே உண்மை!
ஒரு புது உயிர்பெண்ணின் கருவறையில் உருவாக வே ண்டும் என்றால் & ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இரு ப்பதுடன், அதன் செயல்பா டுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போ துமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப் புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலி ருந்து வெளியேறும் உயிரணு, கரு வாக உருமாற வாய்ப்பு ஏற் படும்.
ஆணின் பிறப்புறுப்பு இரண்டு வித மாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படுவது மாதிரியான அமைப்பு. கண்ணுக்குத்தெரியாமல் உட்புறமா க அமைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல் உட்புற மாக அமைந்திருப்பவற்றில், விதைக ள் உட்பட பல உறுப்புகள் உள்ளன.
கருவை உருவாக்க ஆணின் விந்தில் உள் ள உயிரணுவால் (Cell / Stem Cell) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப் புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி.
[சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிற து. ஆண் குறியைப் பெண் குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட்டது. ஆண்குறியைப் பயன்படுத்தாமல்… செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிர ணு உள்ள விந்தை மட் டும் பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழி முறைகள் வந்து விட்டன. பெண்ணின் கரு ப்பையிலிருந்து கரு முட்டை வெளிவரும் சமயத்தில், ஆணி ன் விந்தை எடுத்து அதற் குள் செலுத்தி விடு வது ஒரு வழி. இதற்கு இன்ட்ராயுடிரியன் இன்செமினேஷன் (inter uterine insemination) என்று பெயர். இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை. இதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டை இரண்டையும் தனி யாக வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத் துக்கருவை உரு வாக்கி விடுகிறார் கள். ]
பொதுவாக ஒரு ஆண், பருவ வய தை அடைந்த பின்னர் அவனின் ஆண்குறி 3 முதல் 4 அங்குலம் (வி றைப்பு தன்மையில்லாதபோது) நீள மாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதார ண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்ற வு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோ ருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு. விதவிதமான உயரம், அதற்கே ற்ப விதவி தமான எடைகளில் ஆண்க ள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாக வும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவ லைப்பட வேண்டியதில்லை. ஏனெ னில், சாதாரணநிலையில் ஆண்குறி எந்த அளவில் இருந்தாலும், உண ர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கு ம்போது எல்லோருக்கும் கிட்டத் தட் ட ஒரேஅளவுக்கு வந்துவிடும். அதே போல, ஆண்குறி விறைத்த நிலை யில் பெண் குறியின் கடைசி வரை உள்ளே போனால்தான் கரு உருவா கும் என்று கருதவேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூட போதும்.
[ஒரு பெண்ணைத்திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் இரண்டு அங்குலம் இருந்தா லே போதுமானது. ஏனெனில், பெண் ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குல த்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள் ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போ துமானது. அதற்குமேல் அதிகமாக இருப் பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவ தில்லை. பொதுவாக இயற்கை எல்லா ஆண்க ளையுமே போதுமான அளவுள்ள ஆண்குறியுட ன் தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்ச த்தில் ஒருவருக்கு விதி வசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு மைக் ரோபீனிஸ் என்று பெயர்]
அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதை ப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர் ச்சி வசப்படுகிற போது, அதாவது விறைப் பு நிலையில், உடம்போடு ஒட்டிக்கொள்கி ற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டு விதைகள் உள்ளன. பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப்பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண் டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன் ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உட ம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அள வைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கி ற து இயற்கை.
[விதைப்பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப்பையின் வெப்ப நிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப் பிரதேசங்களி ல் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என் று வலியுறுத்தப்படுகிறது. அப்படி யில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்து பயன்படு த்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந் து உயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதி க்கப்படும் என்பது நிரூ பிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளை அணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர் வான உடைகளும் தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள். ]
விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையு ம் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ் வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும். இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோ ருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிற ங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கா ன காரணத்தை மருத்துவ உலகம் இது வரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, நடக்கும் போது இரண்டு விதை யும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால் கசங்கி விடாமல் இருப் பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள் ளது என்று சொல்லப் படுகிறது.
இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார்செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டா ஸ் டொரான் தயாரிப்பது என இரு வேலைக ளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழ கான தோற்றம், தசைக ளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின் பரிசுதான்!
ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிக ள், பை மாதிரி அமைந்திருக்கும். செமின ல் வெஸிக்கிள்ஸ் எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தை த் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தி ன் ஒரு பகுதியாகும். அடுத்து, ப்ராஸ்டே ட்கிலாண்ட் என்பது சிறுநீர் பைக்குக்கீழ் அமைந்துள்ளது. இது ப்ராஸ்டேட் ஃப்ளூ ய்டு எனும் திரவத்தை உற்பத்தி செய்கி றது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.
[ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந் த மனோநிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப் படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக் கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளி கூட தேவையில்லை என்பதை மருத்து வ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத் துவம் குறைய ஆரம்பித் தது.. ]
ஒரு ஆணின் உடலில் உள்ள விதை , செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ் டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக் கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வதி ல் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.
கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கி யம் அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பி லும் பயணம் செய்து கருப்பையை அடை ய அதற்கு சக்தியையும், ஆரோக்கியத் தையும் தருவது செமினல் வெஸிக்கி ல்ஸ் திரவத்தின் பணி. இதில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தியை இது உயிரணு வுக்குத் தருகிறது.
அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியி லிருந்து கிருமிகள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போ து இந்த அமிலங்கள் அக்கிருமிகளை அரித்து விடும். இதன்மூலம் பெ ண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் கிரு மிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்ற து. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங் களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப் புக்குள் போவதற்காக பிராஸ்டேட் சுரப்பி உதவுகிறது. அதாவது, அமிலத்தன் மைக்கு எதிரான காரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமில த்தன்மை உள்ள பாதையில் உயிரணு எந்த சேதமுமி ன்றி பயணிக்கும்.
விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டே ட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டு ப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக் கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்தி வரைக்கும்… ஒரு நொடிகூட ஓய் வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்துகொண்டே இருக்கும். இவை இப்படிபணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல் லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற் பத்தி செய்கிறது. பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொற் று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு கா யம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டும்தான் இதன் பணி பாதிக்கப்படலா ம்.
வேளாண் துறையில் விதை மற்றும் மண் இந்த இரண்டின் முக்கியத் துவத்தை நாம் அறிவோம். இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர விதை என்ற உயிரணு வும், அதைத் தாங்கிச் சுமந்து வளர் க்கக் கூடிய கர்ப்பப் பை என்ற நில மும் தேவை!
ஆணின் விதையிலிருந்து உருவா கும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்று பகுதிகள் உள்ள ன. தலைப்பகுதி கிட்டத்தட்ட வேல் வடிவத்தில் அமைந்திருக்கும். இந் தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள் பொதித்து வைக்கப்பட்டிருக்கின் றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்தும் உயிரணு வின் தலைப் பகுதியில் தான் அடங்கியி ருக்கும். ஒவ்வொரு உயிரணுவின் தலைப் பகுதியி லும் 23 குரோமோ சோம்கள் இரு க்கும் (பெண்ணின் கருமுட்டை யிலும் 23 குரோமோசோ ம்கள் இருக்கும்).
உயிரணுவின் உடல் பகுதியை, உயிரணுவின் பவர் ஹவுஸ் என் று தான் சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு. பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையிலும், பெலோபியன் குழா ய்களிலும் நீச்சலடித்துக் கருப்பைக் குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்தி செல்வ தற்கான சக்தியை உயிரணுவு க்குத் தருவது, உயிரணுவின் உடல் பகுதி தான்.
பெண்ணின் பிறப்புறுப்புக்குள் உயிர ணு நீந்திச்செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி. தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக்குஞ்சு மாதிரி தான், உயிரணுவின் வடிவம் ஏறக் குறைய இருக்கும். வாலின் உதவி யுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5முதல் 7அங்குலம் வரை நீந்த முடியும்.
[தவளைக் குஞ்சை கண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். 17&ம் நூற்றா ண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாததற்குக் காரணம், மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார் க்கை சார்ந்த விஞ்ஞானி லீவன் ஹுக், மைக்ரா ஸ்கோப்பைக் கண்டுப் பிடித்த பிறகுதான் மருத்து வ உலகில் பல அற்புதங்களை, பேருண்மைகளை க் கண்டறியும் வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப் பிடித்த மைக் ராஸ் கோப்பிலேயே முதன்முதலாக உயிர ணுவைப் பரிசோதித்து, உயிர ணு என்பது இப்படித்தான் இருக்கும் என்று உலகின் கூரையில் நின் று கூவினார் லீவன் ஹுக்! ]
ஆணின்விதையில் உருவாகும் உயிரணு, உருவா கும்போதே இன்னொரு உயிரை உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவ மாகவும் இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவ நிலைக்கு வருகிறது. பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முத ல் 72 நாட்கள் வரை ஆகும். அத்தகைய உயிரணு, ஆணு றுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமே உயி ருடன் இருக்கும். அதன் பிறகு இறந்துவிடும். பக்குவ ப்பட்ட உயிரணு ஏதோ காரணங்க ளால் வெளி வர முடியாவிட்டால் (உதாரண மாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடு ம். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயே ஜீரணிக் கப்பட்டு விடும்.