Home உறவு-காதல் கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்…

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்…

28

தற்போது பெரும்பாலும், திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 28 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 24 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.

பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப்படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர்செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.

அதனால், கணவன்–மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தினால்தான்.

அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன்–மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது வித்தியாசத் தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.

பொதுவாக கணவனைக்காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள்.

ஆனால் ஆண்கள் 50 வயதானாலும்கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக்காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள்.

அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், 10வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம்.

26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம்செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.

அதில் உள்ள சாதக–பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால் 26 வயதுடையை மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லிவிட முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.