Home பாலியல் ஓரினச் சேர்க்கையை எதனால் ஏற்படுகிறது??

ஓரினச் சேர்க்கையை எதனால் ஏற்படுகிறது??

23

2-e1448955792494ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம்.
கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை.
பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் குளித்து விட்டால் போதும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
என்றாலும், வாத்ஸாயனர் காலத்தில் கூறப்பட்டுள்ள திருமணங்களில் காந்தர்வ திருமணம் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. காந்தர்வ திருமணம் என்றால் காதல் திருமணம் என்று பொருள்.
அதன்படி ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதுபோல், ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும், பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் ஓரினச் சேர்க்கை மிகப்பெரிய பிரச்சினையாக்கப்பட்டது.
சரி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு எப்படி அந்தத் தூண்டுதல் ஏற்படுகிறது? என்றால், பல மருத்துவ கருத்துகள் நிலவுகின்றன.
மரபணுக் கோளாறினால் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அதனை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
1
கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாறினால் குழந்தைக்கு ஓரினச் சேர்க்கை விருப்பம் வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் குழந்தையின் ஹார்மோனை பரிசோதித்த போது, அதற்கான எந்த நிரூபணமும் இல்லை என்று மறுத்து விட்டது.
குழந்தைப் பருவத்தின் போது நெருக்கடியான சூழலில் வளர்வதால், மனப் பாதிப்பின் காரணமாக ஓரினச் சேர்க்கையில் நாட்டம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதனையும் ஆய்வு செய்த மருத்துவ உலகினர் மறுத்துள்ளனர்.
வேறு தகவலின்படி, குழுவாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஓரினச் சேர்க்கை ஈடுபாடு இருந்தால், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அந்த ஈடுபாடு உருவாகும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.