Home பாலியல் ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய...

ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?

40

news_13-02-2015_65coupleகேள்வி – நான் சுய இன்பம் அனுபவிக்கும்போது விந்தோடு ரத்தம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் – பயப்பட வேண்டாம். இது பொதுவாக ஏற்படுவதுதான். தொற்றுநோய் காரணமாக பொதுவாக ஏற்படுவதுதான் இது. ஆனால் எப்போதும் ஏற்படாது. இது ரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவும் ஏற்படலாம். நீங்களே தகுதி பெற்ற மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
*********************
கேள்வி – எனக்கு 28 வயதாகிறது. எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆனது. உடலுறவு கொள்ள மிகவும் ஆர்வமிருந்தும் என் குறி விறைப்புக் கொள்வதில்லை. முதல் முயற்சியில் பிரச்சனையில்லை. ஆனால் இரண்டாம் முறை ஈடுபட முயற்சிக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. முதல் முயற்சியில் நான் நிறுத்தி தொடரும் முறையை மேற்கொண்டால், விந்து வெளிப்படுவதற்கு முன்பே விறைப்புத் தன்மை இழக்கப்படுகிறது. தயவுசெய்து உதவவும்.
பதில் – எப்போது போதும் என்று உங்கள் உடல் சொல்லும். இரண்டாவது முறையை தவிர்க்க வேண்டும் அல்லது சில மணிநேரத்திற்கு தள்ளிப் போட வேண்டும். முதல் உறவுக்கு முன்பாக ஒருவருக்கொருவர் திருப்திப்படுத்தும் வகையில் சிறப்பாக முன் விளையாட்டில் ஈடுபடவும்.
***************
கேள்வி – எனக்கு 25 வயதாகிறது. எனது காதலனுக்கு பால்வினை சரும நோய் (ஹெர்பிஸ்) உள்ளது. இது என்ன நோய்? அவரை திருமணம் செய்வது சரியா? இது எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை சாதாரணமான ஒன்றாக இருக்குமா? நான் முத்தமிடலாமா? நான் எனது பெற்றோரிடம் சொல்லலாமா?
பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதற்கு வைத்தியம் கிடையாது. ஆனால் அதனை தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக் கூடியது. நீங்கள் முடிவெடுக்கும் முன்பாக ஒரு சரும நிபுணர் மற்றும் பெண் மருத்துவரை பார்ப்பது நல்லது என்று அறிவுறுத்துவேன். எனவே, முத்தமிடுவது உட்பட அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் சாதாரணமான தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் அபாயமானதே. நீங்கள் கண்டிப்பாக இது பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அவர் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதால், நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து விட்டுப்போவதே சிறந்தது என்பேன்.
**************
கேள்வி – எனக்கு வயது 26. கடந்த எட்டு ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு குறைவான பாலுணர்வு ஏற்படுகிறது, சோம்பேறித்தனமான விறைப்புத்தன்மை, ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகின்றன. என்னுடைய எச்பிஏ1சி 6.2, 6.5, 6.7 ஆக இருந்து வந்தது, கடைசியாக 7.3% இருந்தது. நான் ஹூயூமன் மிக்ஸ்டேர்ட் 30/70 இருமுறை (40 யூனிட்கள் காலையில், 30 யூனிட்கள் மாலையில்), பினோம்-10 (ஆல்மெச்ரடான் மெடோக்ஸோமில்), ஆப்டிசுலின் மல்டிவிட்டமின் கேப்சூல் எடுத்துவருகிறேன்.
தற்போது போட்டி தேர்வுகளுக்காக மும்முரமாக தயாராகி வருகிறேன். தேர்வு அழுத்தம், இதர இயற்கை உடல் அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விறைப்பின்மை போன்ற வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்.
பதில் – ஆம், நீரிழிவு ஆண் விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. மேலும் (உங்களைப் பொறுத்தவரை) பல ஆண்டுகள் இருந்து சிறப்பாக கட்டுப்படுத்தாவிட்டால் இவ்வாறு ஆகும். உங்கள் மருத்துவரை சந்தித்து சிறந்த கட்டுப்பாட்டை பெற அவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்த விரும்புகிறோம்.
மேலும் உங்கள் பிரச்சனைக்கான துல்லியமான காரணங்களை அறிந்துகொள்ள நீங்கள் வேறு பல சோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ, ஏமாற்றமடையவோ தேவையில்லை. உங்கள் பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதை கடைப்பிடித்தாலே நீங்கள் உங்கள் திருமணத்திற்கு முன்பாகவே சரியாகி விடலாம்.
******
கேள்வி – எனக்கு 47 வயதாகிறது. இரண்டு மகள்கள் உள்ளனர். எனது கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார். இதுதான் பிரச்சனை. ஆனால் எனக்கு அது விருப்பமில்லை. அதேபோல பல ஆண்டுகளாக உறவில் ஈடுபடுவதால் எனது குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா? அதை இறுக்கமாக்கி உறவை இன்பமாக்க நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவரின் பதில் – உங்கள் சந்தேகங்களை உறுதிசெய்துகொள்ள பெண் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் குறியை இறுக்கமாக்கும் அறுவைச் சிகிச்சையை செய்துகொள்ள பரிந்துரைக்கப்படலாம். அதேவேளையில், உங்கள் குறியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கும் என்பதால் நீங்கள் இணையங்களில் பார்த்து கெஜல் உடற்பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம்.
******
கேள்வி – நான் வழக்கமாக வலது புறமாக சுய இன்பம் செய்வேன். விறைப்பு ஏற்படும்போது எனது குறி வலதுபுறமாக வளைந்துள்ளது. இந்த வளைவை நான் சரிசெய்ய விரும்புகிறேன். நான் இடது கரத்தால் சுய இன்பம் அனுபவிக்க வேண்டுமா?
மருத்துவரின் பதில் – இல்லை. வளைவு மையப்பகுதியிலிருந்து 30 டிகிரிக்கும் குறைவாக இருந்தால் சாதாரணமாக உடலுறவு கொள்ள முடியும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கண்டிப்பாக சிறுநீரக மருத்துவரை பார்க்க வேண்டும்.
*****
* ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ் வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது.
* தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம்.
* குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
* மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.
* கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்.
* பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
* திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
* பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற் கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.
* பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மாதிரித் தெரிவன என்ன? அவற்றை அறுவை மூலம் நீக்கலாமா?
சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. பிரசவத்திற்குப் பிறகு பிறப்புறுப்பு விரிவடைவதால் இவை தானாக மறைந்து விடும். என்றாலும் மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
* ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. 14 சதவிகிதப் பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்