Home பாலியல் உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு

உலகளவில் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு

26

உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக் ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத் தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.
உலக கருத்தடை நாள் கொண்டாடப் பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத் தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத் தப்பட்டது.
இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரி யவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள் ளது.
புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளு ம் இளவயதினரின் எண்ணிக் கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமு ம், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித் துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கரு த்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல் லை என தெரிகிறது.
ஐரோப்பிய நாடுகளில் 50 சத வீதம் இளம் வயதினர் பள்ளிக ளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசி விக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற் றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீ தத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர் ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களி டம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தி ல் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சத வீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உற வை விரும்புவதாக தெரிவித்து ள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாது காப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட் டவர்கள் கூறியதாவது, உலகள வில் பாதுகாப்பற்ற உறவுகளா ல் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத் தடை முறை களை குறித்து கே ட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறி த்த சரியான அறிவு இல்லை.
எகிப்தில் உள்ள 30 சதவீத த்திற்கும் மேற்பட்ட இளம் வயதி னர் உறவு கொண்ட பின்பு, குளித் தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீ தத்திற்கும் மேற்பட்ட வர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள் வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின் றனர். இதில் உல களவில் பொது வாக 15 சதவீ தம் பேருக்கு கருத்தடுப்பு மு றைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர்.