Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் பருமனைக் குறைக்க உணவுமுறைகள்

உடல் பருமனைக் குறைக்க உணவுமுறைகள்

27

உடல் கூடுவதற்கான முக்கிய காரணமே நம் உணவு பழக்க வழக்கங்கள் தான். உணவுக்கேற்ற வேலையோ வேலைக்கேற்ற உணவு நம்மில் பலருக்கு கிடையாது. உடல் எடையை உடனே குறைப்பது என்பது இயலாத காரியம். பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக சாப்பாட்டை நிறுத்தி விடுகிறார்கள். இது தவறு. உணவு கட்டுப்பாடு தான் தேவையே யொழிய முழுவதுமாக உணவை தவிர்க்க கூடாது.

உடல் எடை குறைய

ஒருவரது உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அவரது மூளை பதிவு செய்து வைத்து செயலாற்றும் திடீரென 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்து எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு மூளை இடம் கொடுக்காது.

தினமும் காலை 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைத்து விடும். அதற்கடுத்து முதுகுப் புறம், இடுப்புப்பகுதி, வயிற்றுப்பகுதி என இவைகளுக்கென்று தனியாக உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை எளிதாக செய்யலாம். இவ்வாறு உடற்பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொண்டால் மூன்று மாதங்களில் எடையை குறைக்கலாம். அதற்கு மாத்திரை, மருந்துகள் எதுவுமே கிடையாது. வெறும் உடற்பயிற்சி மட்டும் தான்.

உணவு கட்டுப்பாடு!

இந்த உடற்பயிற்சிகளோடு க்ஷயடயnஉந னநைவ தேவை. அதாவது நொறுக்குதீனியை விட்டு விட வேண்டும். இவைகள் பெரும்பாலும் எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக தான் இருக்கும். இதை தவிர்த்து வேக வைத்த உணவு, காய்கறி சாதம், ரசம், குழம்பு என இவற்றை ஒரு வேளை சாப்படிடலாம்.

மற்ற உணவை ஒருவேளை என பிரித்துக் கொள்ள வேண்டும். எப்போதுமே நம் வயிறு அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று என நிரம்பி இருக்க வேண்டும். பழைய உணவுகள், குழம்புகள் என எதையுமே சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். சிப்ஸ், பஜ்ஜி, போண்டா, மிக்சர், இனிப்பு வகைகள், காபி உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டியது முக்கியமானது.

சிறந்த உணவு முறைகளை மேற்கொண்டால் உடல் எடை சாதாரணமாக இருக்கும். உணவு முறையின் கட்டுப்பாடு இல்லாததால் தான் உடல் பருமனடைகிறது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கான சில ஆரோக்கிய உணவு முறைகள்:-

* காலையில் எழுந்தவுடன் முளைவிட்ட கொண்டைக்கடலை அல்லது கப் சுண்டல்
* பகலில் மூன்று தக்காளி

இவை இரண்டையும் அன்றாடம் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளில் வைட்டமின் “சி” முழுமையாக உடலுக்கு நேரடியாக கிடைக்கிறது. இந்த வைட்டமின் சி எல்லா செல்களுக்கும் ஆக்சிஜனை கொடுக்கிறது.

உடல் நஞ்சுப் பொருட்கள் ஏதாவது இருந்தால் உடனே அழித்து வெளியேற்றி விடும். நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதால் இவர்கள் சுமார் 25 கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடலாம். இதன் மூலம் உடல் பருமன் எளிதில் கட்டுப்படுத்தப்படும்.

தட்டைப் பயிறு

அடுத்து தட்டைப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தட்டைப்பயிரில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது உடலில் புதிய செல்களை உருவாக்க தேவையான “செரின்” “கிளைகின்” என்ற இரண்டு அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. நமக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றாலும் அதனை குறைவாக சாப்பிட “வெட்டின்” என்ற ஹார்மோனை தட்டைப்பயிறு சுரக்க செய்கிறது.

இதனால் குறைவாக சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படும். இதன் விளைவு உடலில் அதிக கொழுப்பு சேர்வது தடுக்கப்பட்டு உடல் குண்டாகாமல் இருக்கிறது. தட்டைப்பயிறு சேர்க்காத நாட்களில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.