Home குழந்தை நலம் Tamil Baby Care இதெல்லாம் கொடுத்தா உங்க குழந்தை கொழு கொழுன்னு ஆகிடும்.

Tamil Baby Care இதெல்லாம் கொடுத்தா உங்க குழந்தை கொழு கொழுன்னு ஆகிடும்.

54

குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு உணவு கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். அப்போது ஆரம்பத்தில் எந்த மாதிரியான உணவுகளைக் கொடுப்பது என்பதில் நமக்கு குழப்பம் உண்டாகும்.

ஆனால் சில அடிப்படையான ஆரோக்கிய உணவுகளைக் கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாகவும் கொழுகொழுவெனவும் இருக்கும்.

குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பது மிக அவசியம். தாய்ப்பாலில் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான அனைத்து சத்துக்களும் நிறைத்திருக்கும். குழந்தையோட வாழ்நாளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் தாய்ப்பாலில் உண்டு. எனவே தான் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு பருப்பு வகைகள், பாதாம் பருப்பு மற்றும் குங்குமப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பின் நீங்க பாதி திரவ உணவு பொருள்களையே அல்லது திட உணவு பொருள்களையோ தாய்ப்பாலோடு சேர்த்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், ஹார்போஹைட்ரெட் மற்றும் நூற்றுக்கும் அதிகமான கலோரிகள் நிறைந்திருக்கின்றன. இதை குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும். உடலுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கும். தினமும் வெறுமனே வாழைப்பழத்தை மட்டும் கொடுப்பதற்கு பதிலாக பனானா கேக், பனானா மில்க் க்ஷேக் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

அடுத்ததாக நெய். நெய் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் முக்கிய பொருள். இதில் கொழுப்பு சத்துக்கள் மற்றும் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கடைகளில் கிடைக்கும் நெய் சுத்தமானதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். வீட்டில் தயாரித்த நெய்யாக இருந்தால் மிகவும் நல்லது.

அதேபோல், தயிரில் நிறைந்திருக்கும் அதிகப்படியான கால்சியம், கொழுப்பு சத்துக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் குழந்தைக்கு தேவையான ஆற்றலையும் வலிமையையும் கொடுக்கிறது. இது புளிக்க வைக்கப்பட்டது என்பதால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.

பருப்புகளில் நிறைய புரதங்கள், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. பருப்பை தயிருடன் கலந்து கொடுப்பதை தவிர்க்கவும். பருப்புகளை இட்டிலியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காய்கறிகளுடன் சேர்த்து மசியல் போல செய்தும் கொடுக்கலாம்.

உருளைக்கிழங்கில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரெட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இது எளிதில் செரிக்கக்கூடியது. உருளைக்கிழங்கை எண்ணெய் பொரித்து குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

கேழ்வரகில் இரும்பு சத்து, புரத சத்து, நார்ச்சத்து மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் நல்லது. இதை லட்டு, தோசை மற்றும் ரொட்டிகளாக கூட செய்து கொடுக்கலாம்.

இந்த உணவுகளைக் குழந்தைகளின் அன்றாட உணவாகக் கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாகவும் கொழுகொழுவெனவும் இருக்கும்.