Home சமையல் குறிப்புகள் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு

ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு

22

தேவையான பொருட்கள் :-

பச்சைப் பயறு – 2 கப்
பச்சரிசி – சிறிதளவு

பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:-

பச்சைப்பயறையும் அரிசியையும் நன்கு கழுவி 6 மணிநேரம் ஊறவையுங்கள்.
இரண்டையும் ஒன்றாக்கி 1 பச்சைமிளகாய், இஞ்சி, ஒரு வெங்காயம், பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.
இன்னொரு வெங்காயத்தையும், மீதமுள்ள பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி அதையும் மாவில் கலந்து கொள்ளுங்கள்.
தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி மெலிதாக பரப்பி வேகவையுங்கள்.
கமகமக்கும் ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு ரெடி. ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
வதக்கிய அயிட்டங்களை மாவில் சேர்க்காமல் தோசைமேல் தூவியும் வேகவைக்கலாம். அலங்காரத்துக்கு அலங்காரமும் ஆயிற்றுஸ கூடுதல் ருசியும் ஆயிற்று!
பெசரட்டுடன் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி ஆகியவை தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.