Home சமையல் குறிப்புகள் ஆத்தூர் மட்டன் மிளகு குழம்பு

ஆத்தூர் மட்டன் மிளகு குழம்பு

39

காரமான சுவையான ஆத்தூர் ஸ்பெஷல் மட்டன் குழம்பு எப்படி செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/ 2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
புதினா, கொத்தமல்லி தழை – சிறிதளவு

மசாலாவுக்கு

மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 /2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
முந்திரி – 5
ஏலக்காய் -3
துருவல் தேங்காய் – 1/2 கப்
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்

செய்முறை

வெங்காயம், புதினா, கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளி பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முதலில் மசாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், தனியா தூள், பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மட்டன். மஞ்சள்தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
அதனுடன் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி வேக வைக்கவும்.
கறி வெந்ததும் அதற்கு மேலாக கொத்தமல்லி தழையை தூவி விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஆத்தூர் மட்டன் மிளகு குழம்பு ரெடி!