Home ஆண்கள் ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது

ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது

182

images9ஆண்குறியின் அமைப்பு
ஆண் குறி மூன்று அடுக்கு மென்மையான மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும்.
ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இருதிசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே
சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது.
ஆண் குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடி ப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோலத் தோன்று ம்.
இந்த மூன்று உருளைகளிலும் மென்மையான திசுக்கள் உள் ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக் குழாய் கள் செல்கின்றன.
ஆண்குறி முழுவதும் ஓடும் ஏராளமான உணர்ச்சி நரம்புகள் தொடும்போதும், அழுத்தப்படும் எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது. கிளர்ச்சியுற்ற நிலையில் நிறைய இரத்தம் பாய்வதால் திசுக்கள் உப்பி ஆண்குறி விரைக்கிறது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி மிக மென்மையான மழுங்கிய அமைப்பு போன்றது. இதில் ஏராளமான நுண்ணிய நரம்பு முனைகள் உள்ளன. இது மிக உணர்ச்சி மிக்க பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலைப்பகுதியில் தான் உணர்ச்சிகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப் பகுதி க்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்ப திலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கி றார்கள்.

தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலியும், எரிச்சலும் ஏற்படும்.
ஆண் குறியின் முன் தோல்
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன் தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச் சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை (Circumcision) உண்டு.
ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கி ஆண்குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.
முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையை அனைத்து யூதர்க ளும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர்..
முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையால் தொற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது.
முன் தோல் நீக்கும் அறுவை சிகிச்சையால் ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர். இத னால் நீண்டநேரம் உடலுறவில் ஈடுபடமுடியும் என இன்னொ ரு சாரர் எண்ணுகின்றனர் ஆனால் இவை அனைத்தும் அறிவி யல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல.

ஆண் குறியின் அளவு
ஆண்குறியின் அளவு ஆணுக்குஆண் மாறுபடும். நிறம், அளவு , வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு.
சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண் குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.
பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே.
எத்தனை சிறிய ஆண்குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என் பதுதான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் 2 செ மி அளவிற்கே ஏராளமான உணர்ச்சி நரம்பு நுனிகள் உள் ளன. அதற்கு மேலே சென்றால் காம உணர்வுகள் தூண்டப் படாது.
அபூர்வமாகச்சிலருக்கு 2செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி (Micro Penis) அமைந்து விடுவதுண்டு. இது இயற் கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் செக்ஸ் வளரூக்கியான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம்.
சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி உள்ளது, நம்மால் பெண்ணைத் திருப்திப்படுத்தமுடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மை குறைவு ஏற்படும் வாய்ப்புண்டு.

விதைப்பை
ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் முடி வளர்ச்சி காண ப்படும்.

விதைப்பை உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் அமை ந்துள்ளன. இந்த விதைகள் வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் தளர்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளி ரில் இறுகிச்சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இதுதான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றா கச் செயல்பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக் கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கை யாகவே அமைந்துள்ளது.

ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடி னாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன் னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது.
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டுதொழில்கள். ஒன்று ஆண்ஹர்மோனைச் சுரக்கிறது.
இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னு ம் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த டெஸ்டோஸ்டீரான் ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.

விந்து
விந்து ஒட்டக்கூடிய வழவழப்பான தண்ணீர், சளி போன்ற ஒரு திரவம்,
விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல்,
விந்து வெளியாகும் போது அது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்
விந்து, விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந் தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத் தியாக 70 நாட்கள் ஆகும்.

ஒரு விந்தணு 3 பாகங்களைக்கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக் ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.

விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயி லிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும்.

இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள் ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பை யின் பின்புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ஆசனவாய் வழி யாக விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறை ந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு முறை வெளியாகும் விந்தின் அளவு 5.மி.லி ஆகும். ஒரு மில்லி லிட்டர் விந்தில் 4முதல் 12கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற் பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?
விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம். ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர்வாழக்கூடிய ரசாயனமு ம் இதில் உள்ளது.

மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும். ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்ட தே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலரு க்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உட லுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக் கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறி யின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார் கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தி ன் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.