Home ஆரோக்கியம் அடிக்கடி தலைவலி வருதா? இதில் கவனம் செலுத்துங்க

அடிக்கடி தலைவலி வருதா? இதில் கவனம் செலுத்துங்க

21

download (1)பெரும்பாலான நபர்களுக்கு தொல்லை கொடுக்கும் விடயங்களில் ஒன்று தலைவலி.
நாம் செய்யும் செயல்களால் தான் தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இவ்வாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், உடலில் கெடுதலை ஏற்படுத்தி விடுகின்றன.

நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே போதும்.

ஈரமான கூந்தல்

காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கி, தலைவலியை உண்டாக்கும்.

இதற்காக ஹேர் ட்ரையரை பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது கூந்தல் உதிர்வை ஏற்படுத்தி விடலாம்.

அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.

மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும்.

வாசனை திரவியங்கள்

சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும்.

கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவிக்கு அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பர்.

டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.

அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும்.

ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அதிக குளிர்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சரியான தூக்கம்

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.