Published On: Sat, Jul 21st, 2012

உச்சக்கட்ட இன்பம் எவ்வாறு இருக்கும்…??

செக்ஸ் உறவில் கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டம் ஒரு சில தம்பதியருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஏற்படும். ஒரு சில தம்பதியர்களுக்கு இடையே மாறுபடும். சில சமயம் தீவிரமான உச்சக்கட்டும், மிகவும் சத்தமாக வெளிப்படலாம். சில உச்சக்கட்டம் மென்மையான நிகழலாம். அது உறவில் ஈடுபடும் நிலையைப் பொருத்து அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

 

செக்ஸ் உறவின்போது உணர்வுகள் தூண்டப்பட்டு இனியும் பொறுக்கமுடியாது என்ற நிலையில் தம்பதியர் இருவருமே தங்களின் இறுக்கமான நிலையை விட்டு வெளியேறுகின்றனர் இதுவே உச்சக்கட்டம் அல்லது கிளைமேக்ஸ் எனப்படுகிறது. உச்சக்கட்டமானது ஒருவித நெகிழ்வுநிலை, மனிதர்களின் உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பநிலை, மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த நிலை என்று வர்ணிக்கின்றனர் நிபுணர்கள். எனவே உச்சக்கட்டம் என்பது உறவில் ஈடுபடும் நேரம், மனநிலை, சூழ்நிலை என்பதைப்பொருத்து அமையும்.

 

உச்சக்கட்ட நேரத்தில் ஆணுக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். முக்கியமாக உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தம் அதிகமாகிறதாம். இன்ப எழுச்சி நிலை என்பது ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலருக்கு சீக்கிரம் வந்துவிடும், சிலருக்கு நீடித்த இன்பம் கிடைக்கும்.
அதேபோல் பெண்ணுக்கு இன்ப எழுச்சி நிலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பெண் உறுப்பானது ஆண் உறுப்பை இருக்கமாக பிடித்துக்கொள்கிறதாம்.

 

கருப்பை முன்னோக்கி வருமாம். உச்சக்கட்ட நிலையானது பெண்ணுக்கு பெண் மாறுபடுகிறது. அந்த நேரத்தில் ஒருவித பரவச நிலை ஏற்படுவதாக ஒருசில பெண்கள் தெரிவித்துள்ளனர். சில பெண்கள் அந்தரத்தில் தொங்குவதைப்போல உணர்கின்றனராம். சிலரது பால் உறுப்புகளில் வெப்பம் தோன்றி மறைகிறதாம். இன்னும் சிலருக்கோ ஒரு கோடி மின்னல்கள் உடல்முழுவதும் தாக்கியதைப்போல உணர்கின்றனராம். ஆனால் ஆண்களைப்போல பெண்கள் விந்துநீரை பீய்ச்சுவதில்லை அதற்குப் பதிலாக அவர்களின் உறுப்புகளில் ஒரு வித நீர் சுரக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Leave a comment

You must be Logged in to post comment.